குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை – கணவர் கைது!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை – கணவர் கைது!

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள நல்லடிசேனையை சேர்ந்தவர் உஷால்(39). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி (36). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தை இல்லை. இதுகுறித்து, உஷால் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து சுமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை இரவு வழக்கம் போல் மதுபோதையில் வந்த உஷால், மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை – கணவர் கைது!

இதனால் மனமுடைந்த சுமதி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை இரவு சுமதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சுமதியின் தாய் அளித்த புகாரின் பேரில், தேசூர் போலீசார் மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக உஷால் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.