காதணி விழா அழைப்பிதழில் பெயர் இடம்பெறாததால், பெண் தற்கொலை!

 

காதணி விழா அழைப்பிதழில் பெயர் இடம்பெறாததால், பெண் தற்கொலை!

நாகை

வேதாரண்யம் அருகே காதணி விழாவிற்கு சகோதரர் முறைப்படி அழைப்பு விடுக்காததால் மனமுடைந்த பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி. விஜயலட்சுமியின் சகோதரரின் குழந்தைகளுக்கு சில நாட்களுக்கு முன்பு காதணி விழா நடைபெற்றுள்ளது.

காதணி விழா அழைப்பிதழில் பெயர் இடம்பெறாததால், பெண் தற்கொலை!

இதற்கான அழைப்பிதழில், ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரை போட வில்லை என கூறப்படுகிறது. மேலும், அழைப்பிதழை நேரில் வழங்காமல், அஞ்சல் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி வீட்டின் அருகில் உள்ள முந்திரி தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த வாய்மேடு காவல் நிலைய போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.