குழந்தைகளை பார்க்க கணவர் அனுமதிக்காததால், இளம்பெண் தற்கொலை!

 

குழந்தைகளை பார்க்க கணவர் அனுமதிக்காததால், இளம்பெண் தற்கொலை!

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே குழந்தைகளை பார்க்க கணவர் அனுமதிக்காததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூரை சேர்ந்த சந்திரன் மகள் சசிரேகா(35). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிதிஷ் (12), விஷ்வா (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக சசிரேகா கடந்த ஓராண்டு காலமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

குழந்தைகளை பார்க்க கணவர் அனுமதிக்காததால், இளம்பெண் தற்கொலை!

மேலும், தம்பதியினர் இருவரும் விவாகரத்து கோரி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், வழக்கின் விசாரணைக்காக கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று சசிரேகா மற்றும் முருகேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, மகன்களை பார்க்க சசிகலா கேட்டுக்கொண்டும், கணவர் முருகேசன் அனுமதிக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சசிரேகா சம்பவத்தன்று வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட சசிரேகா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.