கொரோனாவால் கணவரை இழந்த பெண்… தனக்கும் தொற்று ஏற்பட்டதால் தற்கொலை!

 

கொரோனாவால் கணவரை இழந்த பெண்… தனக்கும் தொற்று ஏற்பட்டதால் தற்கொலை!

ஈரோடு

பவானி அருகே கொரோனாவால் கணவரை இழந்த பெண், தனக்கும் தொற்று ஏற்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி சம்தாவதி. இவர்களது மகன் யுவராஜ். தம்பதியினர் இருவரும் ஆப்பக்கூடலில் சைக்கிள் ஸ்டாண்ட் வைத்து நடத்தி வந்தனர். யுவராஜ் திருமணமாகி கோவையில் வசித்து வந்தார். இந்த நிலையில், செங்கோட்டையனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர், கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனாவால் கணவரை இழந்த பெண்… தனக்கும் தொற்று ஏற்பட்டதால் தற்கொலை!

இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி அன்று செங்கோட்டையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கோவையிலேயே அவருடைய இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. தொடரந்து, நேற்று முன்தினம் சம்தாவதி ஆப்பகூடல் திரும்பிய நிலையில், அவருக்கு சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதனால் மனமுடைந்த சம்தாவதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனாவால் கணவன் – மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஆப்பக்கூடல் பகுதியில் சோகத்தை ஏற்படத்தி உள்ளது.