குடும்ப தகராறில் குழந்தையை கொன்று, இளம்பெண் தற்கொலை!

 

குடும்ப தகராறில் குழந்தையை கொன்று, இளம்பெண் தற்கொலை!

ராணிப்பேட்டை

ராணிபேட்டை அருகே குடும்ப தகராறில் 3 வயது மகளை கொன்றுவிட்டு, தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தயாளன். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், கீர்த்தி(6), ஹரிதா(3) என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர். தயாளன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்தி விட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மதுபோதையில் வந்த தயாளன், வெண்ணிலாவுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

குடும்ப தகராறில் குழந்தையை கொன்று, இளம்பெண் தற்கொலை!

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த வெண்ணிலா, நள்ளிரவில் மகள் ஹரிதாவை தூக்கிச்சென்று வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை தாயும், மகளும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் குழந்தையை கொன்று, தாயும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.