ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா விற்ற பெண் கைது!

 

ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா விற்ற பெண் கைது!

தேனி

ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.47 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைமயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டம் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில், கடமலைக்குண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா விற்ற பெண் கைது!

அப்போது, அந்த பகுதியில் பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணை பிடித்து போலீசார், காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தங்கம்மாள்புரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கலைசெல்வம் என்பவரது மனைவி ஈஸ்வரி என்ற மாரீஸ்வரி (48) என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, கடமலைக்குண்டு போலீசார், ஈஸ்வரி விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.47 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.