வேலை கேட்ட இளம் பெண்கள் – கூட்டி சென்ற பெண் -வீட்டில் அடைத்து வைத்து நடந்த விபரீதம் .

 

வேலை கேட்ட இளம் பெண்கள் – கூட்டி சென்ற பெண் -வீட்டில் அடைத்து வைத்து நடந்த விபரீதம் .

ஊரடங்கால் வேலையிழந்த இரு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்

வேலை கேட்ட இளம் பெண்கள் – கூட்டி சென்ற பெண் -வீட்டில் அடைத்து வைத்து நடந்த விபரீதம் .

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வசாய் பகுதியில்  41 வயதான அருணா சவாண் என்ற பெண் வசித்து வந்தார் .இவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது மற்றும் 23 வயதான இரு பெண்களை தொடர்பு கொண்டார் .அப்போது அந்த பெண்கள் தாங்கள் இந்த கொரானாவால் உண்டான ஊரடங்கு  நேரத்தில் வேலை இழந்து விட்டதாகவும் ,தற்போது வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளார்கள் .மேலும் அவர்களின் வருமானத்தில்தான் தங்களின் குடும்பம் இருப்பதாகவும் தங்களின் குடும்பத்தில் வேறு யாருக்கும் வேலையில்லாததால் தாங்கள் மிகவும் வறுமையில் வாடுவதகவும் கூறினர் .

அதை  கேட்ட அந்த அருணா ,அந்த இரு பெண்களுக்கும் உடனே ஒரு பெரிய தொகையை கொடுத்தார் .அதன் பிறகு அவர்களிருவரையும் தன்னுடைய வீட்டிற்கு வேலை கொடுப்பதாக கூறி கூட்டி வந்தார் .ஆனால் அந்த இரு பெண்களையும் பின்னர் அவர் பிரைன் வாஷ்  செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் .இதன் மூலம் அவர் பல லட்சங்களை  சம்பாதித்தார் .பிறகு இந்த விபச்சார விஷயத்தை  அங்குள்ள சிலர் போலீசாருக்கு ரகசியமாக தெரிவித்தார்கள் .அதனால் அந்த வசாய் பகுதி போலீசார் மாறுவேடத்தில் சிலரை அந்த பெண்னின் வீட்டிற்கு வாடிக்கையாளர் போல அனுப்பினார்கள் .அப்போது அங்கு விபச்சாரம் நடப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள் .பின்னர் போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து, அந்த வீட்டிலிருந்து இரு பெண்களை மீட்டனர் .பிறகு அந்த பெண்களை வைத்து வைத்து விபச்சாரம் நடத்திய அருணா சவாண் கைது செய்தனர்  .மேலும் அருணாவுக்கு கூட்டாளிகள் இருக்கிறார்களா மற்றும் வேறு  பெண்களை எங்காவது ஒளித்து வைத்திருக்கிறாரா  என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலை கேட்ட இளம் பெண்கள் – கூட்டி சென்ற பெண் -வீட்டில் அடைத்து வைத்து நடந்த விபரீதம் .