காதல் திருமணம் செய்த இளைஞரின் தாயார் மற்றும் நண்பர் கொலை : பெண்ணின் உறவினர்கள் 3 பேர் கைது!

 

காதல் திருமணம் செய்த இளைஞரின் தாயார் மற்றும் நண்பர் கொலை : பெண்ணின் உறவினர்கள் 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளையை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு முத்துப்பேச்சி என்ற மனைவியும், ஆத்திமுத்து, விக்னேஷ் ராஜா என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் விக்னேஷ் ராஜா பொட்டல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரை பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இதை எடுத்து ஏரல் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

இதையடுத்து நேற்று இரவு விக்னேஷ் ராஜா தனது வீட்டருகே நண்பர் அருண் ,தந்தை லட்சுமணன், தாய் முத்துப்பேச்சி ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை வெட்டி விட்டு தப்பி சென்றது.

காதல் திருமணம் செய்த இளைஞரின் தாயார் மற்றும் நண்பர் கொலை : பெண்ணின் உறவினர்கள் 3 பேர் கைது!

இதில் முத்துப்பேச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க லட்சுமணன், அருண், விக்னேஷ் ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதை தொடர்ந்து லட்சுமணனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் சிகிச்சை பெற்று வந்த அருண் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது லட்சுமணன், விக்னேஷ் ராஜா இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் திருமணம் செய்த இளைஞரின் தாயார் மற்றும் நண்பர் கொலை : பெண்ணின் உறவினர்கள் 3 பேர் கைது!

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஏரல் போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணின் உறவினர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.பெண்ணின் அண்ணன் முத்துராமலிங்கம், சித்தப்பா அருணாச்சலம், உறவினர் முத்துசுடர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.