கல்லூரி சமையல்காரர்… காவிரி ஆற்றங்கரையில் பெண்ணின் உடல்… பதறிய ஓட்டர் ஓனர் !- விரைந்த திருச்சி போலீஸ்

 

கல்லூரி சமையல்காரர்… காவிரி ஆற்றங்கரையில் பெண்ணின் உடல்… பதறிய ஓட்டர் ஓனர் !- விரைந்த திருச்சி போலீஸ்

தனியார் கல்லூரியில் சமையலராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் முக்கொம்பு அருகே காவிரி ஆற்றங்கரையோரம் எரிந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி சமையல்காரர்… காவிரி ஆற்றங்கரையில் பெண்ணின் உடல்… பதறிய ஓட்டர் ஓனர் !- விரைந்த திருச்சி போலீஸ்

திருச்சி முக்கொம்பு அருகே காவிரி ஆற்றங்கரையில் பெண்ணின் உடல் கிடப்பதாக ஓட்டல் நடத்தி வரும் பெண் ஒருவர் ஜீயபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சடலமாக கிடந்த பெண் திருச்சி ஆமூரைச் சேர்ந்த கனகாம்புஜம் என்பது தெரியவந்தது. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.ஆர்.சி தனியார் கல்லூரியில் உள்ள கேண்டினில் சமையல்காரராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. கணவன் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எரித்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி சமையல்காரர்… காவிரி ஆற்றங்கரையில் பெண்ணின் உடல்… பதறிய ஓட்டர் ஓனர் !- விரைந்த திருச்சி போலீஸ்

இது குறித்து டி.எஸ்.பி கோகிலா கூறுகையில், “முக்கொம்பு அருகே காவிரி ஆற்றுப்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக பெண் ஒருவர் கொடுத்த தகவலின் பெயரில் விசாரித்து வருகிறோம். முதல்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருப்பார் போல் தெரிகிறது. இது குறித்து முழுமையாக விசாரித்து வருகிறோம்” என்றார்.