“பொற்கோவிலுக்கு போன பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வைத்தார்கள்” -யுவராஜ் சிங் கூட்டத்தால் வந்த வினை.

 

“பொற்கோவிலுக்கு போன பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வைத்தார்கள்” -யுவராஜ் சிங் கூட்டத்தால் வந்த வினை.

கோவிலுக்கு தனியாக வந்த ஒரு பெண்ணை ஆறுபேர் சேர்ந்த ஒரு கும்பல் கடத்தி கற்பழித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு ஒரு 25 வயதுள்ள ஒரு பெண் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாமி தரிசனம் செய்ய வந்தார் .அப்போது பஞ்சாபின் அமிர்தசரஸில் வசிக்கும் யுவராஜ் சிங், குர்பிரீத் சிங் மற்றும் குல்தீப் சிங் என்ற மூவரோடு இன்னும் மேலும் மூவர் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை கடத்தினார்கள் .

“பொற்கோவிலுக்கு போன பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வைத்தார்கள்” -யுவராஜ் சிங் கூட்டத்தால் வந்த வினை.


அந்த பெண் தனியாக பொற்கோவிலுக்கு போய் விட்டு அன்று இரவு குருத்வாராவில் தூங்கினார் .மறுநாள் அதிகாலை அந்த பெண் தனியாக தூங்குவதை கண்ட யுவராஜ் சிங் அந்த பெண்ணை அணுகி தான் அவரை அவரின் வீட்டில் விட்டு விடுவதாக கூறி தன்னுடைய வண்டியில் லிப்ட் கொடுத்து கூட்டி சென்றார் .ஆனால் அவரை அவரின் வீட்டிற்கு கூட்டி செல்லாமல் ஒரு தனிமையான பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்றார் .அப்போது அங்கு ஏற்கனவே ஐந்து பேர் அவர்களுக்காக காத்திருந்தார்கள் .அவர்கள் அங்கு வந்ததும் அனைவரும் சேர்ந்து அந்தபெண்ணை வாயை பொத்தி கட்டி வைத்தார்கள் .பின்னர் ஆறு பேரும் அந்த பெண்ணை மாறி மாறி கற்பழித்தார்கள் அதன் பிறகு அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது என்றும், மீறி சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள் .ஆனால் அந்த பெண் தைரியமாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் அந்த ஆறு பேர் மீதும் பாலியல் பலாத்கார புகார் .கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குற்றவாளிகளில் மூவரை கைது செய்தார்கள் .மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் .அந்த 6 பேரும் தானிய சந்தைகள் மற்றும் சூளைகளில் தொழிலாளர்களாக பணியாற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

“பொற்கோவிலுக்கு போன பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வைத்தார்கள்” -யுவராஜ் சிங் கூட்டத்தால் வந்த வினை.