” நீ நிர்வாணமா ஓடினா ,என் பொண்ணு வீட்டுக்கு ஓடி வருவா” – காதலால் விரட்டப்பட்ட பெண்.

 

” நீ நிர்வாணமா  ஓடினா ,என் பொண்ணு வீட்டுக்கு ஓடி வருவா” – காதலால்    விரட்டப்பட்ட பெண்.

தங்களின் மகளை காதலித்த காதலனின் தாயை நிர்வாணமாக ஓடவிட்டு தண்டனை கொடுத்த சிலரை போலீசார் கைது செய்தார்கள் .

” நீ நிர்வாணமா  ஓடினா ,என் பொண்ணு வீட்டுக்கு ஓடி வருவா” – காதலால்    விரட்டப்பட்ட பெண்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கரிம்கஞ்ச் கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு டீனேஜ் மகனிருக்கிறார் .அந்த மகன் அந்த ஊரில் உள்ள ஒரு பணக்காரரின் மகளை காதலித்து வந்துள்ளார் .அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்துள்ளார் .இந்நிலையில் அந்த இருவரின் காதல் பற்றி அந்த ஊரில் உள்ள பல பெரியவர்களுக்கும் அந்த பெண்ணின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது .

அதனால் அந்த காதலனிடம் அந்த காதலியின் குடும்பத்தினர் அவர்களின் மகளை மறந்து விடுமாறும் ,மீறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று மிரட்டியுள்ளார்கள் .அதனால் அவர்கள் சில காலம் பிரிந்து வாழ்வது போல நடித்தார்கள் .

அதன் பிறகு கடந்த வாரம் அந்த வாலிபர் அந்த பெண்ணை இழுத்து கொண்டு வேறு ஊருக்கு சென்று விட்டார் .இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் ,அதனால் இது பற்றி அந்த ஊர் பெரியவர்களிடம் முறையிட்டார்கள் .இதை கேட்டு அந்த ஊர் பஞ்சாயத்தார்கள் ஒன்று கூடி பேசினார்கள் .அப்போது தங்களின் பேச்சை  மீறி அந்த வாலிபர் அந்த பணக்காரரின் மகளை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதால் அவரின் குடும்பத்தை தண்டிக்க வேண்டுமென்று கூறினார்கள் .

அதற்குள்  அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த வாலிபரின் தாயை கூப்பிட்டு அவரை நிர்வாணமாக  அந்த கிராமத்தை சுற்றி வரவேண்டுமென்று கூறினார்கள்  .அப்படி செய்தால் இதை கேள்விப்பட்டு அவரின் மகன் தங்களின் மகளை வீட்டில் கொண்டு வந்து விடுவார்  என்றார்கள் .அதன் படி அந்த பெண்ணை அந்த கிராமத்தை நிர்வாணமாக சுற்றி வர  செய்தார்கள் .பின்னர் இது பற்றி  போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது  .தகவல் கேள்விப்பட்டு  விரைந்து வந்த போலீசார் அந்த ஓடிப்போன பெண்ணின் உறவினர்  பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

” நீ நிர்வாணமா  ஓடினா ,என் பொண்ணு வீட்டுக்கு ஓடி வருவா” – காதலால்    விரட்டப்பட்ட பெண்.