“ஒரு உறவுக்கு 5000,முழு இரவுக்கு 15000”-பெண் பொறியாளரின் போட்டோவை போட்டு பேரம் பேசிய கொடுமை

 

“ஒரு உறவுக்கு 5000,முழு இரவுக்கு 15000”-பெண் பொறியாளரின் போட்டோவை  போட்டு பேரம் பேசிய கொடுமை

ஒரு பெண் பொறியாளரின் போட்டோவை ஆபாச தளத்தில் வெளியிட்டு அவருக்கு ரேட் பேசிய கொடுமையால் இனி பெண்கள் தங்களின் போட்டோவை சமூக ஊடகத்தில் வெளியிடவே அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது

“ஒரு உறவுக்கு 5000,முழு இரவுக்கு 15000”-பெண் பொறியாளரின் போட்டோவை  போட்டு பேரம் பேசிய கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 40 வயதான ஒரு பெண் மென் பொறியாளராக அங்குள்ள ஒரு ஐ டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .இரண்டு குழந்தைகளின் தாயான அவரின் போட்டோவை யாரோ சில விஷமிகள் ஊடகத்திலிருந்து எடுத்து அதை ஓர் ஆபாச விபச்சார வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார் .மேலும் அவரின் போட்டோவின் அருகே வேறு ஒருவர் போன் நம்பரை வெளியிட்டுள்ளார் .
அந்த பெண்ணின் போட்டோவையும் ,போன் நம்பரையும் ஆபாச தளத்தில் பார்த்த அவரின் நண்பர்கள் சிலர் இந்த விஷயத்தை அவரிடம் கூறினார்கள் .இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனது நண்பர்களை விட்டு அந்த போன் நம்பருக்கு போன் செய்ய சொன்னார் ,பிறகு அவரின் நண்பரொருவர் வாடிக்கையாளர் போல் அந்த நம்பருக்கு போன் செய்த போது ,மறுமுனையில் பேசிய நபர் அந்த நபரிடம் அந்த பெண்ணுக்கு ரேட் பேசினார் .அப்போது அவர் ஒரு முறைக்கு 5000 ரூபாய் என்றும் முழு இரவுக்கு 15000 ரூபாய் என்றும் அந்த பெண்ணுக்கு ரேட் கூறியதை கேட்டு அந்த நண்பரும் அந்த பெண்ணும் அதிர்ந்து போனார்கள் .
மேலும் அவர் அட்வான்ஸ் தொகை 7000த்தை அனுப்ப சொல்லி ஒரு அக்கௌன்ட் நம்பரையும் அனுப்பினார் .
இதையெல்லாம் கேட்டு மிகவும் மன புழுக்கத்துக்கு உள்ளான அந்த பெண் சைபர் க்ரைம் போலிசில் புகார் கூறினார் .அந்த பெண்ணின் புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“ஒரு உறவுக்கு 5000,முழு இரவுக்கு 15000”-பெண் பொறியாளரின் போட்டோவை  போட்டு பேரம் பேசிய கொடுமை