“நீ கண்டவள வச்சிக்கவா என்ன கட்டிகிட்டே” -கேள்விகேட்ட டீச்சரை பிரிட்ஜுக்குள் வைத்த கணவன்.

 

“நீ கண்டவள வச்சிக்கவா என்ன கட்டிகிட்டே” -கேள்விகேட்ட டீச்சரை பிரிட்ஜுக்குள் வைத்த கணவன்.


ஒரு கணவரின் கள்ள உறவை தட்டிக்கேட்ட மனைவியை, கொலை செய்துவிட்டு இன்சூரன்ஸ் பணத்தை எடுத்துக்கொண்ட கணவரை போலீசார் கைது செய்தார்கள்.

“நீ கண்டவள வச்சிக்கவா என்ன கட்டிகிட்டே” -கேள்விகேட்ட டீச்சரை பிரிட்ஜுக்குள் வைத்த கணவன்.


உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் கட்டோலி தொகுதியின், லோஹட்டா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருந்த 40 வயது சந்தா, தன்னுடைய கணவர் சஞ்சய் லுத்ராவுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த ஆசிரியை மீது அவரின் கணவர் 50 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார் .மேலும் அவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்துள்ளது .இந்த கணவரின் கள்ள உறவு விவகாரம் அவருக்கு தெரிய வந்தது .இதனால் அவர் , தன்னுடைய கணவரை கள்ள உறவு விஷயமாக தட்டி கேட்டார் .அதனால் அந்த கணவர் அவரின் மனைவி மீது மிகவும் கோபப்பட்டார் .அதனால் அவரை கொலை செய்து விட்டு அவரின் இன்சூரன்ஸ் பணத்தையும் எடுத்துக்கொள்ள திட்டமிட்டார்
அந்த திட்டப்படி அந்த பெண்ணின் கணவர் சஞ்சய் லுத்ரா மற்றும் அவரது பக்கத்து வீட்டு மருத்துவர் ரஜத் பரத்வாஜ் ஆகிய இருவரும் சேர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு, அவரின் மனைவி சந்தாவை தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு ஓடி விட்டனர் . பின்னர் சாந்தா மீரட்டில் உள்ள அவரது மாமியார் வீட்டில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடப்பதை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .இந்த தகவல் கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் .அப்போது இறந்துபோன சந்தாவின் உடலை அவரின் வீட்டிலிருக்கும் பிரிட்ஜிலிருந்து போலீசார் மீட்டனர் .பின்னர் அங்கிருந்த அவரின் கணவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் அவர் தன்னுடைய மனைவியை இன்சூரன்ஸ் தொகைக்காகவும் ,தனது கள்ள உறவினை தட்டி கேட்டதற்காகவும் கொன்று விட்டதாக கூறினார் .பிறகு போலீசார் அவர் மீதும், அவரின் பக்கத்து வீட்டுக்காரர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.

“நீ கண்டவள வச்சிக்கவா என்ன கட்டிகிட்டே” -கேள்விகேட்ட டீச்சரை பிரிட்ஜுக்குள் வைத்த கணவன்.