உறவினர் வீட்டில் தங்கி படித்த பெண் -அந்த உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டார் -சாலையில் வீசப்பட்டார்..
நைஜீரியாவின் கடாவு பகுதியில் உள்ள பௌச்சி பகுதியில் உள்ள பவுச்சி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவி ,தான் தங்கியிருந்த வீட்டின் உறவினரால் கெடுக்கப்பட்டு வீதியில் வீசப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
பவுச்சி பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படிக்கும் அந்த மாணவி மிகவும் ஏழை .அவர் ஏழை மாணவி என்பதால் அவரின் பெற்றோரால் கல்விக்கட்டணம் கூட கட்ட முடியவில்லை .இதனால் தன்னுடைய கல்லூரி இருக்கும் பகுதியிலிருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார் .அப்போது கல்வி கட்டணம் கூட அந்த உறவினர்தான் கட்டினார் .இதனால் அந்த உறவினர் அவரை பலாத்காரம் செய்துள்ளார் .
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது யாரோ சிலர் அவரை கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டு கரி பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர் .அது அந்த உறவினரின் வேலையாகத்தான் இருக்கும் என்று அவர் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த உறவினரை கைது செய்தனர்.