“டேய் தகப்பா ,தீயில் வெந்து செத்துப்போ” -மகள் தந்தையை கொளுத்திய காரணத்தை கேட்டா கண்ணீர் வரும்

 

“டேய் தகப்பா ,தீயில் வெந்து செத்துப்போ” -மகள் தந்தையை கொளுத்திய காரணத்தை கேட்டா கண்ணீர் வரும்

மகளின் காதலை எதிர்த்த தந்தையை அந்த குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கொண்டு தீ வைத்து கொளுத்திய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“டேய் தகப்பா ,தீயில் வெந்து செத்துப்போ” -மகள் தந்தையை கொளுத்திய காரணத்தை கேட்டா கண்ணீர் வரும்

உத்தரப்பிரதேச மாநிலம் புடான் நகரின் வஜிரகஞ்ச் பகுதியில் ஹத்ரா கிராமத்தில் வசிக்கும் முகமது அமீர் என்ற 55 வயதான ஒரு தந்தைக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனிருக்கிறார் .அவர்களில் பெரிய மகளுக்கு கல்யாணமாகியுள்ளது .இரண்டாவது மகள் ஒருவரை காதலித்து வருகிறார் .அந்த பெண்ணின் காதலுக்கு அவரின் மருமகன் ,மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தார்கள் .ஆனால் அந்த பெண்ணின் தந்தை மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார் .
அதனால் அந்த தந்தை தனது மகளிடம் அவரின் காதலனை சந்திக்க கூடாது என்றும் ,தான் பார்க்கும் மாப்பிளையைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் கூறினார் .இதற்கு அவரின் குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .மேலும் அவரின் முடிவை மாற்றிக்கொள்ள அவரிடம் பலமுறை மன்றாடி பார்த்தார்கள் .ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்து மகளின் காதலை எதிர்த்தார் .அதனால் அவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார்கள் .
அதன்படி முகமது அமீர் கடந்த வாரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அவரின் உடலில் தீ வைத்து கொளுத்தினார்கள் .அப்போது அவரின் உடலில் தீ பிடித்ததும் அவர் அலறி துடித்தார் .அதை அனைவரும் பார்த்து ரசித்துள்ளார்கள் .பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் ,போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தார்கள் .அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் .பின்னர் போலீசார் அவரை தீ வைத்து கொளுத்திய அவரின் குடும்ப உறுப்பினர்களை தேடி வருகிறார்கள்.

“டேய் தகப்பா ,தீயில் வெந்து செத்துப்போ” -மகள் தந்தையை கொளுத்திய காரணத்தை கேட்டா கண்ணீர் வரும்