நிர்பயா வழக்கு போன்ற அடுத்த கொடூரம்… ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!

 

நிர்பயா வழக்கு போன்ற அடுத்த கொடூரம்… ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!

உத்தரபிரதேசத்தில் ஓடும் பேருந்துக்குள் பயணம் செய்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவரும் சில உள்ளூர்வாசிகளும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட டிரைவரை சம்பவ இடத்திலே மடக்கி பிடித்தனர். பின் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் பதிவு செய்தனர்.

நிர்பயா வழக்கு போன்ற அடுத்த கொடூரம்… ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!

பிரதாப்கரிலிருந்து நொய்டாவுக்கு வந்து கொண்டிருந்த பேருந்தில்அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் இருந்த மற்ற 12 பயணிகள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​அந்த பேருந்தின் டிரைவர் அதை சாதகமாகப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மேலும் இரண்டு ஆண்கள் அந்த டிரைவருக்கு உதவியுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பேருந்தின் டிரைவர் ஓட்டுநராக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தப்பி ஓடியவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

நிர்பயா வழக்கு போன்ற அடுத்த கொடூரம்… ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!

“பாதிக்கப்பட்டப் பெண் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவார். பேருந்தில் உள்ள மற்ற பயணிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் பின்புலம் சோதனை செய்யப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து விசாரிப்பதற்காக போலீசார் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர். ஓடும் பேருந்தில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெண்கள் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.