“சேலையை உருவி ,சாலையில் விரட்டி …”பைக்கில் கூட்டி சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்.

 

“சேலையை உருவி ,சாலையில் விரட்டி …”பைக்கில் கூட்டி சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்.

ஒரு பெண்ணை பைக்கில் லிப்ட் கொடுத்து கூட்டி சென்ற இரு வாலிபர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“சேலையை உருவி ,சாலையில் விரட்டி …”பைக்கில் கூட்டி சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்.


சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் 40 வயதான பெண் சத்தீஸ்கர் மாநில கிராமப்புற மிஷனில் பணிபுரிகிறார். அவர் அக்டோபர் 18 ம் தேதி லைலுங்கா பகுதியில் உள்ள கலக்கியா கிராமத்திற்கு அருகே, முகத்தில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார் .
இது பற்றி நடந்த போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது :அந்த பெண் அக்டோபர் 17 ஆம் தேதி இரவு, ஜஷ்பூர் மாவட்டத்தில் பதல்கானில் இருந்து வீடு திரும்பும் போது, அந்த ​​பெண்ணுக்கு இருவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்து கூட்டி வந்துள்ளார்கள் .
அதன் பிறகு இருவரும் அவளை ஒரு ஒதுங்கிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு யாதவ் என்பவர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார் . அதே சமயம் அவர்கள் அவரை பலாத்காரம் செய்ய சேலையை உருவி சாலையில் துரத்தியுள்ளார்கள் ., அப்போது அவரை இரும்பு ஆயுதத்தால் முகத்தில் அடித்ததில் அவர் மயக்கமடைந்தார்.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்த பெண்ணுக்கு சனிக்கிழமை காலை ராய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுயநினைவு ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.பிறகு அந்த பெண்ணை இநத நிலைமைக்கு ஆளாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகிறார்கள்.

“சேலையை உருவி ,சாலையில் விரட்டி …”பைக்கில் கூட்டி சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்.