நிலத் தகராறில் பெண் வெட்டிக்கொலை… கொலையாளியை அடித்துக்கொன்ற உறவினர்கள்!

 

நிலத் தகராறில் பெண் வெட்டிக்கொலை… கொலையாளியை அடித்துக்கொன்ற உறவினர்கள்!

நாகை

நாகை மாவட்டம் திருமருகல் அருகே நிலத் தகராறில் சித்தியை வெட்டிக்கொன்ற இளைஞரை, அவரது உறவினர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் வீரகாளி (65). தூய்மை பணியாளர். இவரது மனைவி தனபாக்கியம் (52). இவர்களுக்கு பிச்சைமுத்து(34), முத்துப்பாண்டி(28) உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த வீரகாளியின் அண்ணன் சீனிவாசனின் மகன் ராஜு(38). இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தனியார் நிலத்தில் பன்றி வளர்த்து வந்தார்.

நிலத் தகராறில் பெண் வெட்டிக்கொலை… கொலையாளியை அடித்துக்கொன்ற உறவினர்கள்!

இந்த நிலத்தை சமீபத்தில் வீரகாளியின் மகன் பிச்சைமுத்து விலை கொடுத்து வாங்கி உள்ளார். இதுதொடர்பாக ராஜூ, தனது சித்தப்பா வீரகாளியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை மாலை மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ராஜூ வீரகாளியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது, அதனை தடுக்க முயன்ற சித்தி தனபாக்கியத்தின் கழுத்தில் அரிவாள் வெட்டியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த வீரகாளியின் மகன் முத்துப்பாண்டி, சிமெண்ட் கல்லினால் ராஜீவின் தலையில் தாக்கினார். அதில், படுகாயமடைந்த ராஜுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, ராஜுவை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் முத்துப்பாண்டியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.