சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ரயிலில் பிறந்த குழந்தை!

 

சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ரயிலில் பிறந்த குழந்தை!

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ரயிலில் பிறந்த குழந்தை!

ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களை சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல அந்தந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் சென்ற போது கர்ப்பிணி ஒருவருக்கு பிரவசவ வலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு  உடன் பயணித்த பயணிகளே பிரசவம் பார்த்துள்ளனர்.

இதையடுத்து தனாபூர் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழு தாயையும் சேயையும் மீட்டு மேற்கொண்டு சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்.