பெண் குழந்தையை வெறுக்கும் பெண்கள் -மாமியார்களால் நசுக்கப்படும் பெண் சிசுக்கள்..

 

பெண் குழந்தையை வெறுக்கும் பெண்கள் -மாமியார்களால் நசுக்கப்படும் பெண் சிசுக்கள்..

ஆண் குழந்தையை பெற்றெடுக்காமல் ,பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளை அவரின் மாமியார் கொடுமை செய்ததால் அந்த தாயாரே பெண் குழந்தையை கொன்ற கொடுமை நடந்துள்ளது

பெண் குழந்தையை வெறுக்கும் பெண்கள் -மாமியார்களால் நசுக்கப்படும் பெண் சிசுக்கள்..

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள டெஹ்ரியா கிராமத்தில் சரிதா என்ற 22 வயது பெண்ணும் அவரின் கணவர் சச்சின் ஆகியோர் அவர்களின் மாமியாரோடு வசித்து வந்தனர் .மருமகள் சரிதாவுக்கு கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது .அந்த பெண் குழந்தை பிறந்தது முதல் அவரின் மாமியார் அவரின் மருமகள் சரிதாவை ஆண் குழந்தையை பெற்றெடுக்காமல் பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டாயே என்று திட்டி கொண்டே இருந்தார் .இதனால் அவரை பல கொடுமைகள் செய்து வந்தார் .அவருக்கு பிறந்த அந்த பெண் குழந்தையையும் தொடாமல் கொடுமைகள் செய்து வந்துள்ளார் .
அதை தட்டிக்கேட்ட அவரின் மருமகள் சரிதாவை அவரின் மாமியாரும் கணவரும் சேர்ந்து கொண்டு ஊராரிடம் இவர் மன நலம் பாதித்தவர் என்று கூறியுள்ளனர் .இதனால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளான அந்த பெண் சரிதா வெள்ளிக்கிழமையன்று தனக்கு பிறந்த அந்த பெண் குழந்தையை அந்த வீட்டின் தண்ணீர் தொட்டியில் வைத்து அமுக்கி கொன்று விட்டார் .
பிறகு அக்குழந்தையை காணாமல் அந்த வீட்டிலுல்லோர் தேடிய போது அவரும் சேர்ந்து தேடியுள்ளார் .பிறகு அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு அவர்கள் வந்து தேடியபோது,குழந்தை ஒரு தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து அவரின் தாயாரே கொலை செய்துள்ள விவரம் கண்டறிந்து அதிர்ச்சியுற்றனர் .பிறகு போலீசார் அந்த தாயை கைது செய்து விசாரித்த போது தனக்கு ஆண் குழந்தை பிறக்காததால் தனது மாமியார் பண்ண கொடுமை தாங்க முடியாமையால் தான் பெண் குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தார் .

பெண் குழந்தையை வெறுக்கும் பெண்கள் -மாமியார்களால் நசுக்கப்படும் பெண் சிசுக்கள்..