கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற பெண்… உத்திரபிரதேசத்தில் நடந்த கொடூரம்!

 

கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற பெண்… உத்திரபிரதேசத்தில் நடந்த கொடூரம்!

உத்திப்பிரதேத்தில், ஒரு பெண் தனது கணவரின் இரண்டாவது கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீஸ் தகவல்களின்படி, மொராதாபாத்தில் ஒரு ட்ரான்ஸ்போர்ட்டராக வேலைபார்த்து வந்தார் மொஹமட் ஜாகீரின். இவரது முதல் மனைவியின் பெயர் ஷபானா. ஜாகிர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவரது இரு மனைவிகளுக்கும் இடையே அடிக்கடி தொலைபேசியில் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அலியாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஷபானா ஒரு துப்பாக்கியுடன் ஆலியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற ஷபானா, ஆலியாவை திடீரென பின்னால் இருந்து தாக்கியுள்ளார். தனது கையில் இருந்த துப்பாக்கியால் ஆலியாவை நான்கு முறை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆலியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற பெண்… உத்திரபிரதேசத்தில் நடந்த கொடூரம்!

இந்த கொலை சம்பவம் நடந்தபோது அவர்களின் கணவர் ஜாகிரின் அங்குஇல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ஆலியா 7 மாத கர்ப்பிணி எனவும், கொலை நடந்த இடத்தில் 9மிமீ புல்லெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஷபானா, ஆலியாவை துப்பாக்கியால் சுட்ட பிறகு தப்பிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது துப்பாக்கியுடன் அலியாவின் உடலின் அருகே நின்றுள்ளார். இதையடுத்து ஷபானா கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.