மாடியிலிருந்த டைலர் மனைவி -மனசை பறிகொடுத்த மெக்கானிக்-அடுத்து நடந்த விபரீதம்

 

மாடியிலிருந்த டைலர் மனைவி -மனசை பறிகொடுத்த மெக்கானிக்-அடுத்து நடந்த விபரீதம்


கள்ள காதலை கண்டுபிடித்த கணவரை, அவரின் மனைவி காதலனோடு சேர்ந்த கொன்றதால் போலீஸ் அவர்களை கைது செய்தனர் .

மாடியிலிருந்த டைலர் மனைவி -மனசை பறிகொடுத்த மெக்கானிக்-அடுத்து நடந்த விபரீதம்


ஹைதராபாத்தின் கர்மிகா நகரில் முகமது சித்திக் அஹ்மத் என்ற ஒரு டைலர், தன்னுடைய மனைவி ரூபினாவுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் ரூபினாவுக்கு அதே பகுதியில் மெக்கானிக்காக இருக்கும் 22 வயதான மொஹமட் அலி என்பவரோடு கள்ள தொடர்பு ஏற்பட்டது .இதனால் இருவரும் அவரின் கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்தனர் .டைலர் கடைக்கு சென்றதும் அந்த மெக்கானிக் வீட்டிற்கு வருவார் ,பின்னர் டைலர் மனைவியோடு உல்லாசமாக இருந்து விட்டு போவார் .
இந்த கள்ள தொடர்பு பற்றி அந்த ரூபினாவின் கணவர் சித்திக்குக்கு தெரிய வந்தது .அதனால் அவர்களை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தார் .ஒரு நாள் இருவரும் அந்த கணவரிடம் சிக்கி கொண்டார்கள் .அதன் பிறகு அவர்களை அவர் கண்டித்துள்ளார் .பிறகு அந்த மெக்கானிக் ஓடிப்போனதும் அவர் தன்னுடைய மனைவியை டார்ச்சர் செய்து அடித்து துன்புறுத்தியுள்ளார் .பிறகு அவரின் மனைவி இந்த விஷயத்தை அவரின் காதலன் மொஹெமட் அலியிடம் தெரிவித்தார் .பின்னர் இருவரும் சேர்ந்து அந்த கணவர் சித்திக்கை கொலை செய்ய முடிவெடுத்தனர் .
அவர்களின் திட்டப்படி அந்த கணவர் , மார்ச் 22ம் தேதியன்று அவரின் மாமியார் வீட்டில் இருந்தார் .அப்போது அந்த ரூபினா அவரின் காதலன் அலிக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறினார் .உடனே அந்த அலி அந்த கணவர் சித்திக்கை ஒரு ஸ்க்ரூ டிரைவர் கொண்டு தாக்கி கொலை செய்தார் .பின்னர் இந்த கொலை பற்றி இறந்த சித்திக்கின் சகோதரர் போலீசுக்கு தகவல் சொன்னார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அவரின் மனைவியே கள்ள காதலனோடு சேர்ந்து கொன்றதை கண்டுபிடித்தனர் .பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர் .

மாடியிலிருந்த டைலர் மனைவி -மனசை பறிகொடுத்த மெக்கானிக்-அடுத்து நடந்த விபரீதம்