“சீரியல் பார்த்து சீரழிஞ்ச குடும்பம் “அலமாரியில் பணத்தை வைப்பது போல குழந்தை பிணத்தை வைத்த பெண் ..

 

“சீரியல் பார்த்து சீரழிஞ்ச குடும்பம் “அலமாரியில் பணத்தை  வைப்பது போல குழந்தை பிணத்தை வைத்த பெண் ..

மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் வசிக்கும் தாஜ்மிரா பீபி என்ற பெண்ணுக்கும் அவரின் நாத்தனாருக்கும் எந்நேரமும் சண்டை வந்து கொண்டே இருக்கும் .வழக்கமா மாமியாருக்கும் ,மருமகளுக்கும்தான் சண்டை வரும் .இது கொஞ்சம் வித்தியாசமானது .தன்னுடைய நாத்தனாரோடு சண்டை போட்டுக்கொண்டே இருந்த பீபி அவரை பழி வாங்க துடித்தார் .இதற்கான சரியான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் .

“சீரியல் பார்த்து சீரழிஞ்ச குடும்பம் “அலமாரியில் பணத்தை  வைப்பது போல குழந்தை பிணத்தை வைத்த பெண் ..

அப்போது சனிக்கிழமையன்று பீபியின் எதிரியான அவரின் நாத்தனாரின் இரண்டு வயது மகன் அங்கு விளையாடிக்கொண்டிருந்தான் .அப்போது அவனை பார்த்த பீபிக்கு அவனை கொலை செய்ய முடிவு செய்தார் .இதனால் அந்த இரண்டு வயது சிறுவனை தன்னுடைய பெட் ரூமுக்குள் தூக்கி சென்று அவனை கோழி அறுப்பது போல, கத்தியால் துண்டு துண்டாக வெட்டினார் .பிறகு அவனின் பிணத்தை பணம் வைக்கும் பீரோவில் வைத்து பூட்டி விட்டார் .
மகனை காணாத அந்த சிறுவனின் தாய் போலீசில் புகாரளித்தார் .போலீசார் அவர்களின் வீட்டிற்கு வந்து விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சினையில், அந்த வீட்டிலேயே இருக்கும் பீபி என்ற பெண் அந்த சிறுவனை கொலை செய்து பீரோவுக்குள் அடுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர் .பிறகு போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்த போது ,தாம் நிறைய சீரியல் பார்ப்பதாகவும் அதில் ஒரு சீரியலில் இப்படி செய்துள்ளதை பார்த்து தனக்கு அந்த ஐடியா தோன்றியதாகவும் அவர் கூறியதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் .

“சீரியல் பார்த்து சீரழிஞ்ச குடும்பம் “அலமாரியில் பணத்தை  வைப்பது போல குழந்தை பிணத்தை வைத்த பெண் ..