இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதல்… கணவர் கண்முன்னே மனைவி பலி…

 

இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதல்… கணவர் கண்முன்னே மனைவி பலி…

தேனி

பெரியகுளம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் – ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் தங்களுடைய இல்ல நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை வைப்பதற்காக இன்று பெரியகுளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பெரியகுளம் அடுத்த கைலாசப்பட்டி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது.

இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதல்… கணவர் கண்முன்னே மனைவி பலி…

இதில் வாகனத்தில் இருந்து இருவரும் தடுமாறி விழுந்தபோது, ராஜலட்சுமி மீது பேருந்தின் சக்கர ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரியகுளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.