சத்தியமங்கலம் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி!

 

சத்தியமங்கலம் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே விறகு சேகரிக்க சென்ற பெண்ணை காட்டுயானை தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (50). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த பெண்களுடன், வனத்தை ஓட்டிய பகுதிகளில் விறகு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது, வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அந்த பகுதிக்கு வந்தது. இதனை கண்டு, அங்கிருந்த பெண்கள் தப்பியோட முயன்றனர். அப்போது, நாகரத்தினத்தை காட்டுயானை பலமாக தாக்கிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

சத்தியமங்கலம் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி!

இதில் பலத்த காயமடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாகரத்தினத்தை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து, கடம்பூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.