கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் பலி… மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசில் புகார்!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் பலி… மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசில் புகார்!

சேலம்

சேலம் மாவட்ட ஆத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம்பெண் உயிரிழந்ததாக கூறி அரசு மருத்துவமனையை உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி (26). இவருக்கு கடந்த கடந்த ஏப்ரல் மாதம் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்து உள்ளது. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக சுபலட்சுமி, தனது கணவருடன் கட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு பணியில் இருந்த செவிலியர்கள், சுபலட்சுமியை கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் பலி… மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசில் புகார்!

இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி அன்று வீட்டில் இருந்த சுபலட்சுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சுபலட்சுமியின் கணவர் மற்றும் உறவினர்கள, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தான் அவர் உயிரிழந்ததாக கூறி, நேற்று கட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.