இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் பலி, மேலும் ஒருவர் படுகாயம்

 

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் பலி, மேலும் ஒருவர் படுகாயம்

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் பவுனு. இவரது உறவினர் ராஜகுமாரி. இவர்கள் இருவரும் தங்களது நிலங்களில் விளைந்த காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்று, வாணியம்பாடி உழவர் சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு, இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் பலி, மேலும் ஒருவர் படுகாயம்

வாணியம்பாடி – ஆலங்காயம் சாலையில் உள்ள நேதாஜி நகர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது எதிரே வாந்த டிப்பர் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில், நிலை தடுமாறி சாலையில் விழுந்த பவுனு மற்றும் ராஜகுமாரி ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பவுனு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜகுமாரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து வாணியம்பாடி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் விஜயை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.