“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்

 

“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்


16 வயதான பெண்ணின் போட்டோவை, ஊடகத்தில் விபச்சாரியாக சித்தரித்து வெளியிட்ட இன்னோரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்

“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்


குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள கோட்டா பகுதியில் வசிக்கும் 32 வயது ராதா சிங் என்ற பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 16 வயதான மைனர் பெண்ணின் தந்தையோடு நட்பு கொண்டார்.டெல்லியில் அந்த பெண்ணின் தந்தையோடு பேயிங் கெஸ்ட் ஆக ஒரு விடுதியில் அந்த பெண் தங்கியிருந்த போது இருவரும் நணபர்களாக பழகியுள்ளார்கள் .பின்னர் அவர்களின் நட்பில் சில பிரச்சினைகளால் விரிசல் விழுந்ததால் இருவரும் பிரிந்து விட்டார்கள் .
அதனால் அந்த ராதா சிங் அவரை பழிவாங்க துடித்தார் .அதனால் அவரின் 16 வயதான மகளின் போட்டோவை சமூக ஊடகத்தில் 2500 ரூபாய் என்று விலைப்பட்டியல் போட்டு வெளியிட்டார் .மேலும் அவரின் போட்டோவின் அருகே அவரின் போன் நம்பரையும் வெளியிட்டார் .மேலும் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளையும் சிங் அனுப்பியுள்ளார் .அதை பார்த்த பலர் அந்த பெண்ணுக்கு போன் செய்து பாலியல் டார்ச்சர் செய்துள்ளார்கள் .அதனால் அந்த பெண் தன்னுடைய தந்தையோடு சென்று அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ,சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணையை தொடங்கினார்கள் .அப்போது அந்த பெண்ணின் சமூக ஊடக கணக்கை ஆராய்ந்து பார்த்ததில் அது ராதா சிங்க் என்ற பெண் செய்த சதி வேலை என்று கண்டறிந்தார்கள் .பின்னர் அந்த பெண் ராதா சிங்கை, போலீசார் தொழில்நுட்ப கண்காணிப்பு உதவியுடன் அகமதாபாத்தின் கோட்டா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தது.மேலும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்

“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்