விவாகரத்து செய்த பெண் -தேடி வந்த முன்னாள் கணவர் -அடுத்து பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்

 

விவாகரத்து செய்த பெண் -தேடி வந்த முன்னாள் கணவர் -அடுத்து பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்

ஒரு பெண்ணின் முன்னாள் கணவரால் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் 35 வயதான ரேகா ரத்தோர் என்ற பெண் தன்னுடைய கணவர் சுனில் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார் .இப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த பெண், கணவரை  விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார் .அந்த ரேகா அந்த பகுதியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வந்தார் .

விவாகரத்து செய்த பெண் -தேடி வந்த முன்னாள் கணவர் -அடுத்து பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்

.இந்நிலையில் அவரின் கணவர் வேறொரு பெண்ணோடு வாழ்ந்து வந்தார் .சுனில் தன்னுடைய மனைவியை டைவர்ஸ் செய்து விட்டாலும் அந்த முதல் மனைவியோடு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார் .பதிலுக்கு அந்த ரேகாவும் அவரோடு சண்டை போட்டுள்ளார் .

இந்நிலையில் அந்த பெண்  ரேகா தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அவரின்  வீட்டில் திடீரென்று இறந்து கிடந்தார் .அதனால்  அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர் .பிறகு இந்த கொலை பற்றி துப்பு துலக்கியபோது அவரின் முன்னாள் கணவர் குடும்ப தகராறில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுள்ளதாக சந்தேகப்பட்டு அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர் .