“தோழியை கூட்டி வந்து கூட்டி கொடுத்த பெண்” -விருந்துக்கு வந்த பெண் விருந்தான கொடுமை

 

“தோழியை கூட்டி வந்து கூட்டி கொடுத்த பெண்” -விருந்துக்கு வந்த பெண் விருந்தான கொடுமை


ஒரு தோழியின் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற பெண், அங்கிருந்த சில வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது .

உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தின் கார்வி பகுதியில் வசிக்கும் ஒரு 35 வயது பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு பெண் தோழியாக இருந்துள்ளார் .மேலும் அந்த பெண்ணுக்கு பல ஆண் நண்பர்களும் இருந்துள்ளார்கள் .இந்நிலையில் அந்த பெண்ணின் தோழி மீது அந்த ஆண் நண்பர்களுக்கு மோகம் பிறந்துள்ளது .இதனால் அந்த பெண்ணிடம் அவரை வீட்டிற்கு ஒருநாள் தனியாக வரச்சொல்லுமாறு கேட்டனர் .
தன்னுடைய ஆண் நணபர்களின் பேச்சை தட்ட விரும்பாத அந்த பெண் பிரயாகராஜுல் உள்ள தன் வீட்டிற்கு செப்டம்பர் 28ம் தேதியன்று அந்த பெண்ணை விருந்துக்கு வரச்சொன்னார் .தன்னுடைய தோழி விருந்துக்கு கூப்பிடுகிறாள் என்ற நம்பி வந்த அந்த 35வயது பெண்ணை அந்த வீட்டில் காத்திருந்த இரண்டு வாலிபர்கள் ஒரு அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர் .
இதனால் பாதிக்கபட்ட அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் உள்பட நான்கு பேர் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் .பிறகு அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 35 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் உட்பட 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.அதில் இரண்டு ஆண்கள் மீது கும்பல் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டும் மற்ற மூன்று பேர் மீது கிரிமினல் சதி குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தோழியை கூட்டி வந்து கூட்டி கொடுத்த பெண்” -விருந்துக்கு வந்த பெண் விருந்தான கொடுமை