“ட்ரைவர் தள்ளினார் ,கண்டக்டர் கையை பிடித்தார்” -பஸ்சுக்குள் நடந்த பலாத்காரம்

 

“ட்ரைவர் தள்ளினார் ,கண்டக்டர் கையை பிடித்தார்” -பஸ்சுக்குள் நடந்த பலாத்காரம்

ஒரு பேருந்தில் இரவு நேரத்தில் தனியாக பயணம் செய்த ஒரு இளம் பெண்ணை, அந்த பேருந்தின் ட்ரைவர் மற்றும் கான்டக்டரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பைசாலி பஸ் நிலையத்தில் ஒரு பேருந்தில் ஒரு இளம் பெண் ,சனிக்கிழமையன்று இரவு யாருமில்லாமல் தனியே பயணம் செய்தார் .அப்போது அந்த பஸ் மீரட்டில் டெல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த பஸ்ஸின் கண்டக்டர் அந்த பெண்ணுக்கு குடிக்க கூல் டிங்க்ஸ் வாங்கி கொடுத்தபோது அந்த பெண் மறுத்துள்ளார் .அப்போது அந்த பெண் சந்தேக படுவதாக நினைத்த அந்த பஸ்ஸின் கண்டெக்டர் அந்த குளிர்பானத்தை தான் முதலில் குடிப்பது போல நடித்ததும் ,அந்த பெண் அதை நம்பி வாங்கி குடித்தார் .பிறகு அதை குடித்ததும் அந்த பெண்ணுக்கு அந்த பஸ்ஸிலேயே மயக்கம் வந்தது .உடனே அவர் அந்த பஸ்ஸில் மயங்கி கீழே விழுந்துள்ளார் .
உடனே அந்த பஸ்ஸை அந்த டிரைவர் அங்கு ஓரமாக ஒரு இருட்டு பகுதியில் நிறுத்தினார் .பிறகு அந்த பெண்ணை அந்த பேருந்தின் டிரைவரும் ,கண்டக்டரும் மாறி மாறி கற்பழித்தனர் .பிறகு அந்த பெண்ணை அந்த மீரட் சாலையிலே இறக்கி விட்டு விட்டு பஸ்ஸை எடுத்து கொண்டு ஓடி விட்டார்கள் .மறுநாள் ஒரு இளம் பெண் சாலையில் மயங்கி கிடப்பதை பார்த்த சிலர், போலீசுக்கு தகவல் கூறியதும், விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது, தன்னை அந்த பஸ்ஸில் உள்ள கண்டக்டர் மற்றும் ட்ரைவர் பலாத்காரம் செய்த விஷயத்தினை கூறினார் .பிறகு போலிசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணை கெடுத்த ட்ரைவர் மற்றும் கண்டெக்டரை அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகிறார்கள் .

“ட்ரைவர் தள்ளினார் ,கண்டக்டர் கையை பிடித்தார்” -பஸ்சுக்குள் நடந்த பலாத்காரம்