“குளிர் பானம் கொடுத்து ,பெண்ணை கெடுத்து..” விபத்துன்னு பொய் சொல்லி பெண்ணை வரவைத்து நடந்த பலாத்காரம் .

 

“குளிர் பானம் கொடுத்து ,பெண்ணை கெடுத்து..” விபத்துன்னு பொய் சொல்லி பெண்ணை வரவைத்து நடந்த பலாத்காரம் .


ஒரு பெண்ணை பொய் சொல்லி ஹோட்டலுக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்த மூவரை போலீசார் தேடி வருகிறார்கள் .

“குளிர் பானம் கொடுத்து ,பெண்ணை கெடுத்து..” விபத்துன்னு பொய் சொல்லி பெண்ணை வரவைத்து நடந்த பலாத்காரம் .


பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு பெண் தன்னுடைய 10 வயது மகளோடு தனியே வசித்து வந்தார் .செப்டம்பர் 6 ம் தேதி அவருக்கு திடீரென ஒரு போன் கால் வந்தது .அந்த போனில் பேசிய நபர் அந்த பெண்ணிடம் அவரின் ஆபீசில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கு ஆக்சிடென்ட் நடந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ,உயிருக்கு போராடி வருவதாகவும் கூறினார் .
அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் தன்னுடைய 10 வயது மகளை அழைத்துக்கொண்டு ஒரு பேருந்தில் அவரை பார்க்க புறப்பட்டார் .ஆனால் அங்கு சென்றதும் அங்கு காத்திருந்த அந்த நபர் அந்த பெண்ணுக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்தார் .அதை குடித்த அந்த பெண் உடனடியாக மயக்கமடைந்தார் .உடனே அந்த நபர் அந்த பெண்ணையும் அவரின் 10 வயது மகளையும் அந்த காரிலேயே ஒரு ஹோட்டலுக்கு கடத்தி சென்றுள்ளார் .அந்த ஹோட்டலில் ஏற்கனவே காத்திருந்த இரண்டு பேரோடு சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை மூவரும் பலாத்காரம் செய்தனர் .
பிறகு அந்த பெண்ணை காரில் அழைத்துக்கொண்டு வந்து அந்த பெண்ணையும் அவரின் மகளையும் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் தூக்கி வீசிவிட்டு ஓடிவிட்டார்கள் ,இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் சோர்வுடன் நடந்து சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமெரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் .

“குளிர் பானம் கொடுத்து ,பெண்ணை கெடுத்து..” விபத்துன்னு பொய் சொல்லி பெண்ணை வரவைத்து நடந்த பலாத்காரம் .