“உன் பையன் என் பொண்ண கெடுத்தான் ,இவன் உன்னை கெடுப்பான்” – மாமியாருக்கு கல்யாணம் செய்து வைத்த சம்பந்திகள்.

 

“உன் பையன் என் பொண்ண கெடுத்தான் ,இவன் உன்னை கெடுப்பான்” – மாமியாருக்கு கல்யாணம் செய்து வைத்த சம்பந்திகள்.

ஒரு வாலிபர் ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிப்போனதால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் அந்த காதலனின் தாய்க்கு மாற்று திறனாளி ஒருவருக்கு திருமணம் செய்து கொடுமை செய்தார்கள் .

“உன் பையன் என் பொண்ண கெடுத்தான் ,இவன் உன்னை கெடுப்பான்” – மாமியாருக்கு கல்யாணம் செய்து வைத்த சம்பந்திகள்.

பீகாரில் பாட்னாவில் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு 43வயதான பெண்ணும் அவரின் கணவரும் தங்களின் 18 வயதான டீனேஜ் மகனோடு வசித்து வந்தார்கள் .இந்நிலையில் .அவர்களின் டீனேஜ் மகனுக்கு அந்த ஊரிலுள்ள ஒரு பெண்ணோடு காதல் ஏற்பட்டது .அதனால் அவர்களிருவரும் அந்த ஊர் பஞ்சாயத்தை மீறி பக்கத்து ஊருக்கு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார்கள் .மேலும் அவர்களின் திருமண போட்டோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்கள் .
அதனால் அந்த ஊர் மக்களும் ,திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணின் பெற்றோர்களும் கடுமையான கோபத்திலிருந்தார்கள் .அதனால் அந்த வாலிபரின் தாயை பழி வாங்க துடித்தார்கள் .அதனால் அந்த காதலனின் தாய்க்கு மொட்டையடித்து ,அவரை வேறு ஒரு மாற்று திறனாளி வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தார்கள் .அது மட்டுமல்லாமல் அந்த 43 வயதான தாயை ஊர் மக்கள் அனைவரும் தாக்கினார்கள் .இதனால் மனமுடைந்த அந்த பெண்ணின் கணவர் அந்த ஊர் மக்கள் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் தீவிர விசாரணை செய்தார்கள் .அதன் பிறகு அந்த பெண்ணை தாக்கியதாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அந்த காதலியின் மாமாக்கள் – சிவ்ஜி ஜா மற்றும் பவேந்திர ஜா ஆகியோர் நவம்பர் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் ஊர் நாட்டாமைகள் உட்பட 13 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்ய பொலிசார் முயற்சி எடுத்து வருகிறார்கள் .

“உன் பையன் என் பொண்ண கெடுத்தான் ,இவன் உன்னை கெடுப்பான்” – மாமியாருக்கு கல்யாணம் செய்து வைத்த சம்பந்திகள்.