‘கணவனை தலையில் தூக்கினார் ,ஊரையே சுற்றி வந்தார்’ -கள்ள தொடர்பில் ஈடுபட்ட மனைவிக்கு பஞ்சாயத்தில் கொடுத்த தீர்ப்பு

 

‘கணவனை தலையில் தூக்கினார் ,ஊரையே சுற்றி வந்தார்’ -கள்ள தொடர்பில் ஈடுபட்ட மனைவிக்கு பஞ்சாயத்தில் கொடுத்த தீர்ப்பு

மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவாவில் உள்ள பாரா பகுதியில் ரன்வாஸ் கிராமத்தில் வசிக்கும் ஒரு கல்யாணமான பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .இதனால் அந்த கணவர் அந்த ஊர் பஞ்சாயத்தில் கொண்டு போய் தன்னுடைய மனைவியை நிறுத்தினார் .
ஊர் பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணை விசாரித்தது .அவர்கள் விசாரணை செய்ததில் அந்த பெண்ணின் குற்றம் ஊர்ஜிதமானது ,இதனால் பஞ்சாயத்தார் அந்த பெண்ணை தன்னுடைய கணவனை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஊரார் முன்னிலையில் ஊரையே சுற்றி வரவேண்டுமென தீர்ப்பு தந்தார்கள் .
அதன்படி அந்த மனைவி தன்னுடைய கணவனை தனது தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு அந்த ஊரை சுற்றி வர ,ஊர் மக்கள் எல்லாம் கூடவே ஓடி வர ஒரு ஊர்வலம் நடந்தது .

‘கணவனை தலையில் தூக்கினார் ,ஊரையே சுற்றி வந்தார்’ -கள்ள தொடர்பில் ஈடுபட்ட மனைவிக்கு பஞ்சாயத்தில் கொடுத்த தீர்ப்பு
இந்த காட்சியை படம் பிடித்த பலர் தங்களின் நணபர்களுக்கு ஷேர் செய்ததால் ,அந்த பெண்ணால் ஊருக்குள் அதற்கு பிறகு நடக்க முடியவில்லை .அனைவரும் அந்த பெண்ணை கேலியும் ,கிண்டலும் செய்தார்கள் .இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் அந்த ஊரின் பஞ்சாயத்தார் மீது போலீசில் புகாரளித்தார்.

போலீசார் அந்த பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்டு தீவிர விசாரணை நடத்தி அந்த ஊரை சேர்ந்த ஏழு பேரை கைது செய்தனர் .இதற்கு முன்பு போன வருடமும் இதே போல் ஒரு சம்பவம் அந்த ஊரில் நடந்துள்ளதால் அதை பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

‘கணவனை தலையில் தூக்கினார் ,ஊரையே சுற்றி வந்தார்’ -கள்ள தொடர்பில் ஈடுபட்ட மனைவிக்கு பஞ்சாயத்தில் கொடுத்த தீர்ப்பு