“அடிக்கடி கூப்பிட்டு அபார்ஷன் பண்ண வச்சுட்டியே!” -காதலனுக்கு கல்யாணம் ,காதலிக்கு கருக்கலைப்பு
ஒரு காதலன் தன்னுடைய திருமணத்திற்கு முதல் நாள் காதலியின் கருவை கலைக்க கொடுத்த மாத்திரையால் காதலியின் உயிர் போனது .
உத்தரபிரதேசத்தின் மீரட்டில் ராகுல் என்ற 24 வயதான நபர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தார் .அந்த ராகுல் அந்த பெண்ணை காதலிக்கும்போது கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் .அதன் விளைவாக அந்த காதலி ஐந்து மாத கர்ப்பமானார் .இந்நிலையில் அந்த ராகுலுக்கு வேறு ஒரு வசதியான இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது .அதனால் ராகுல் அந்த காதலியை கழட்டி விட நினைத்தார் .
தன்னுடைய திருமணத்திற்கு முதல் நாள் அந்த காதலி ராகுலிடம் வந்து தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பதில் சொல்லுமாறு சண்டை போட்டுள்ளார் .அதனால் ராகுல் ஒரு கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி கொடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க சொன்னார் .அந்த மாத்திரையை போட்டதும் அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது .அதனால் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை .
அதன் பிறகு இறந்த பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள் .அதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது திருமண ஊர்வலம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.