“கடனை கொடு ,இல்லேன்னா மனைவியை விடு” -நடுரோட்டில் பிரசவம் பார்த்த கடன்காரர்கள்
கடனை கொடுக்காத கடன் காரரின் கர்ப்பிணி மனைவியை நடுரோட்டிலேயே வயிற்றில் உதைத்ததால் அவருக்கு ரோட்டிலேயே குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது
உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள குக்னா கிராமத்தில் சஞ்சய் வர்மா என்ற தனியார் நிறுவன ஊழியர் அங்குள்ள நிதி நிறுவனத்தினரிடம் தன்னுடைய மனைவியின் நகைகளை அடமானம் வைத்து 1.2 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார் ,ஆனால் அவரால் குறிப்பிட்ட தேதிக்குள் கடனையும் வட்டியையும் கட்ட முடியவில்லை .அப்போது அவருக்கு கடன் கொடுத்த கடன்காரர்கள் அவரின் வீட்டு வாசலுக்கு வந்து கடனை கட்டுமாறு சத்தம் போட்டனர் .அதனால் அங்கு கூட்டம் கூடியது .
அப்போது அந்த சஞ்சய் வர்மா வீட்டிற்குள் வந்து பேசுவோமென்றார் ,ஆனால் அதை கேட்காத கடன் காரர்கள் நடுரோட்டிலேயே கடனை கட்டுமாறு கத்தி கூச்சல் போட்டார்கள் .இதன் பிறகு அவரின் கர்ப்பிணி மனைவியும் அவர்களிடம் வந்து காலில் விழுந்து கெஞ்சினார் .ஆனால் அவர்கள் அப்போது அந்த கர்ப்பிணி மனைவியை பிடித்து அவரின் வயிற்றில் எட்டி உதைத்தனர் .இதனால் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு நடு ரோட்டிலேயே குழந்தை பிறந்தது . ,இதை அந்த ஊரே கூடி வேடிக்கை பார்த்தது .பிறகு அந்த பெண்ணையும் குழந்தையையும் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு கூட்டிப் போனார்கள் .
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. பிறகு சஞ்சய் வர்மா தலைமையில் ஊரார் கூடி அவர்கள் மீது நடவடிக்கையெடுக்க போராட்டம் நடத்தினார்கள் .