“இந்த காலத்துல இப்படி ஒரு மாமியார்” -மருமகளுக்காக நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை கொடுத்தார் -அப்படி அந்த மருமகளுக்கு என்னதான் ஆச்சு?

 

“இந்த காலத்துல இப்படி ஒரு மாமியார்” -மருமகளுக்காக நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை கொடுத்தார் -அப்படி அந்த மருமகளுக்கு என்னதான் ஆச்சு?

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழ செய்துள்ளது .அங்கு குடும்ப சண்டையால் குழந்தையோடு திடீரென காணாமல் போன ஒரு மருமகள் திரும்பி வரவேண்டும் என்று கடவுளுக்கு தன்னுடைய நாக்கையே வெட்டி காணிக்கை கொடுத்த மாமியாரால் பலர் ஆச்சர்யப்பட்டுள்ளார்கள் .

“இந்த காலத்துல இப்படி ஒரு மாமியார்” -மருமகளுக்காக நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை கொடுத்தார் -அப்படி அந்த மருமகளுக்கு என்னதான் ஆச்சு?
ஜார்கண்ட் மாநிலத்தில் NIT காம்பஸில் உள்ள ஒரு கிராமத்தில் லஷ்மி என்ற மாமியாருக்கும் அவரின் மருமகள் ஜ்யோதி க்கும் அடிக்கடி சண்டை வருமாம் .இதற்கிடையே புகுந்து அவரின் கணவர் நந்து அடிக்கடி இருவரையம் சமாதானப்படுத்துவாராம் .ஆனால் கடந்த சனிக்கிழமையன்று இருவருக்கும் சண்டை முற்றியுள்ளது .இதனால் மனம் வெறுத்த அவரின் மருமகள் அன்று இரவு தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார் .
இதனால் அவரின் கணவர் பல இடங்களில் தேடியும் தன்னுடைய மனைவி இரவு முழுவதும் வீட்டிற்க்கு வராததால் போலீசில் புகார் கொடுத்தார் .இந்நிலையில் அவரின் மாமியார் தன்னுடைய மருமகள் வீட்டிற்கு திரும்ப வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு தன்னுடைய நாக்கையே வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார் .இந்த சம்பவத்தை பார்த்த பலர் ,இவ்வளவு பாசத்தை மருமகள் மேல வைத்திருக்கும் மாமியார் எதனால் அவரிடம் சண்டை போடவேண்டும் என்று வினா எழுப்பினார்கள் .

“இந்த காலத்துல இப்படி ஒரு மாமியார்” -மருமகளுக்காக நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை கொடுத்தார் -அப்படி அந்த மருமகளுக்கு என்னதான் ஆச்சு?