முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… ஓட்டல் ஊழியருக்கு போலீஸ் வலை…

 

முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… ஓட்டல் ஊழியருக்கு போலீஸ் வலை…

கன்னியாகுமரி

குமரியில் முன்விரோதம் காரணமாக ஓட்டல் பெண் ஊழியரை, சக தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் – மாரியம்மாள் தம்பதியினர். இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு குண்டல் பகுதியில் தங்கியிருந்து, பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மாரியம்மாள் அருகில் உள்ள உணவகத்தில் பாத்திரம் கழுவும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, பாத்திரம் கழுவுவது தொடர்பாக உடன் பணிபுரியும் நெல்லையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… ஓட்டல் ஊழியருக்கு போலீஸ் வலை…

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மாரியம்மாளிடம் சென்று கிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார்.

இதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த மாரியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.