அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால், வேதனையில் பெண் தற்கொலை!

 

அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால், வேதனையில் பெண் தற்கொலை!

திருச்சி

திருச்சி கே.கே.நகரில், அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால் விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி கே.கே.நகர் தொண்டைமான் காலனியை சேர்ந்த விசுவநாதன். அவரது மனைவி நிரக்‌ஷனா. இவர்களுக்கு தயஶ்ரீ என்ற மகளும், தீக்‌ஷித் என்ற மகனும் உள்ளனர். கணவன் – மனைவி இருவரும் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தனர்.

அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால், வேதனையில் பெண் தற்கொலை!

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிரக்‌ஷனாவின் விசா காலம் முடிவடைந்ததால், அவர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். பின்னர், அமெரிக்கா செல்வதற்காக பல முறை முயற்சித்தும், மீண்டும் விசா கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிரக்‌ஷனா நேற்று, கே.கே.நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.