மருத்துவமனை முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை!

 

மருத்துவமனை முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை!

மருத்துவமனை முன்பு பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை!

கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகிற்கு வர தொடங்கியுள்ளனர். இந்த பேரிடர் காலத்திலும் குற்ற சம்பவங்களும், தற்கொலைகளும் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருந்தது. குறிப்பாக இந்தியாவில் தற்கொலை அதிகமாக நடக்கும் மாநிலத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மருத்துவமனை முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை!

இந்நிலையில் கரூர் ரயில்வே மருத்துவமனை முன் 50 வயதான பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளித்தது யார்? என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.