`என்னை பார்க்க வா, வரவில்லையென்றால்… வீடியோவை பார்த்து பதறிய கள்ளக்காதலன்… உயிரை மாய்த்த கள்ளக்காதலி!

 

`என்னை பார்க்க வா, வரவில்லையென்றால்… வீடியோவை பார்த்து பதறிய கள்ளக்காதலன்… உயிரை மாய்த்த கள்ளக்காதலி!

கள்ளக்காதலன் தன்னை பார்க்க வராததால் வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கே.வி.கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரிக்கு (32), அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனுக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி காரைக்குடி பர்மா காலனி சொக்கலிங்க நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது கே.வி.கோட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பிரபுதேவா என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் செல்போனிலேயே நடந்துள்ளது. இதனிடையே, தன்னை பார்க்க வரும்படி பிரபுதேவாவிடம் ராஜேஸ்வரி கூறியுள்ளார். ஆனால், பிரபுதேவா வரவில்லை.

இதனால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ ஒன்றை பதிவு செய்த ராஜேஸ்வரி, அதை வாட்ஸ் அப்பில் பிரபு தேவாவுக்கு அனுப்பிவிட்டு, பின்னர் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோவை பார்த்த பிரபுதேவா அதிர்ச்சி அடைந்து வீட்டின் உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் கதவை திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரி தூக்கில் தொங்கி கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியின் சகோதரர் கார்த்திக்ராஜா அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றார்.

கணவனை பிரிந்து வாழ்த்த மனைவி, கள்ளக்காதல் தன்னை பார்க்க வராத வேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.