“என்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை…” – வாசலில் காதலியால் நேர்ந்த விபரீதம்

 

“என்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை…” – வாசலில் காதலியால் நேர்ந்த விபரீதம்


காதலனின் திருமணத்தை நிறுத்த சென்ற காதலியை அடித்து உதைத்து சாலையில் வீசிய சம்பவம் நடந்துள்ளது
டெல்லியின் மகிபல்பூர் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண்ணொருவர் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார் .இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்தார் ..இந்நிலையில் அந்த பெண்ணின் காதலனுக்கு திடீரென்று உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள அவரின் வீட்டில் வேறொரு பெண்ணை பார்த்து மணமுடிக்க ஏற்பாடு செய்தனர்

“என்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை…” – வாசலில் காதலியால் நேர்ந்த விபரீதம்


அதனால் அந்த காதலனின் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடந்து வந்தது .இதனால் அந்த காதலன் அந்த பெண்ணுக்கு போன் செய்து தனக்கு வேறொரு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு நடப்பதை தெரிவித்தார் .உடனே அந்த பெண் அதைக்கேட்டு திடுக்கிட்டு ,ஒரு டாக்சியில் அந்த காதலன் வீட்டை நோக்கி சென்றார் .பின்னர் அந்த காதலன் வீட்டில் நடக்கவிருந்த திருமண நிகழ்ச்சியில் சென்று அந்த கல்யாணத்தை நிறுத்துமாறு கூச்சல் போட்டார் .
உடனே அந்த காதலனின் உறவினர்கள் அந்த பெண்ணை அடித்து உதைத்து தெருவில் இழுத்து சென்றனர் .பின்னர் அவரின் உடைகளை கிழித்து சாலையில் வீசினார்கள் .உடனே இந்த சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .பொலிஸார் அந்த காதலனின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிந்து,அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்