சமூக அவலங்களைத் தட்டி கேட்ட பெண் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்… கூண்டோடு தூக்கிய போலீசார்!
கண்முன் நடந்த சமூக அவலங்களைத் தட்டி கேட்ட பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரு கடபீசனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சில ஆண்கள் ரோட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். பின்பு அவர்களிடம் இது குறித்து அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் சொல்வதைக் கேளாமல் அந்த குழுவினர் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். அதனால் அந்தப் பெண் அவர்களை வீடியோ எடுத்து உள்ளூர் சங்கத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதேபோல் ஒரு நபர் பொதுவெளியில் சிறுநீர் கழித்ததையும் அந்தப் பெண் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் பெண்ணைத் தாக்கியுள்ளார். இதனால் கடபீசனஹள்ளி குடியிருப்பாளர்கள் சேர்ந்து அந்தப் பெண்ணைத் தாக்கியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவலஹள்ளி போலீசார் தாக்குதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.