தேனியில் இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது

 

தேனியில் இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது

தேனி

தேனி நகரில் இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். தேனி ரயில்வே கேட் அருகேயுள்ள பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனி நகர காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தேனியில் இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது

அப்போது, அங்குள்ள வாடகை வீடு ஒன்றில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 25 வயது பெண்ணையும், அந்த தொழில் நடத்திவந்த பாக்கியம் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பாக்கியம் மீது, பி.சி.பட்டி காவல் நிலையத்தில் விபச்சார வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, தேனி நகரில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர்.