“குடும்பத்தை கொன்ற குடி பழக்கம் “போதையில் புத்தி தடுமாறி சுத்தி எடுத்தார் – மனைவி ,குழந்தைகளை கொலை செய்தார்..

 

“குடும்பத்தை கொன்ற குடி பழக்கம் “போதையில் புத்தி தடுமாறி சுத்தி எடுத்தார் – மனைவி ,குழந்தைகளை கொலை செய்தார்..

டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் ஷிவ் பிளாட்டில் உள்ள ஒரு வீட்டில் ப்ரீத்தி என்ற மனைவியோடு சுகன் என்ற கணவர் இரண்டு குழந்தைகளோடு வசித்து வந்தார் .அப்போது சுகனுக்கு திடீரென போதை பழக்கம் தொற்றிக்கொண்டது .இதனால் எந்த வேலைக்கும் போகாமல் எந்நேரமும் குடிபோதையில் இருந்தார் ,இதனால் கணவன் ,மனைவிக்குள் எப்போதும் சண்டை வந்துகொண்டே இருந்தது .

“குடும்பத்தை கொன்ற குடி பழக்கம் “போதையில் புத்தி தடுமாறி சுத்தி எடுத்தார் – மனைவி ,குழந்தைகளை கொலை செய்தார்..
இந்நிலையில் நேற்று இரவு ப்ரீத்திக்கும் அவரின் கணவர் சுகனுக்கும் வழக்கம் போல சண்டை வந்துள்ளது .அப்போது சுகன் குடிபோதையில் இருந்துள்ளார் .அந்த குடும்ப சண்டை முற்றிப்போன பிறகு போதையிலிருந்த சுகன் அவரின் மனைவி ப்ரீத்தி மற்றும் இரண்டு குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார் .

“குடும்பத்தை கொன்ற குடி பழக்கம் “போதையில் புத்தி தடுமாறி சுத்தி எடுத்தார் – மனைவி ,குழந்தைகளை கொலை செய்தார்..மறுநாள் ப்ரீத்தியின் தந்தை வீட்டிற்கு வந்து மகளின் வீட்டின் கதவை தட்டிய போது அவர் கதவை திறக்காமல் இருந்ததால் ,ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார் .அப்போது அவரின் மகள் ப்ரீத்தியும் இரண்டு பேர குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார் .இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசில் தகவல் சொன்னார் .போலீசார் விரைந்து வந்து மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி பிவைத்தனர் .பிறகு மூவரையும் கொலை செய்து விட்டு தலைமறைவான அவரின் மாப்பிள்ளை சுகன் பற்றி மாமனாரிடம் விசாரித்தபோது ,அடிக்கடி சுகன் குடித்து விட்டு வந்து தன்னுடைய மகளிடம் சண்டை போட்டதாகவும் ,அந்த குடிபோதையில் வந்த சண்டையில் இப்படி குடும்பத்தையே கொலை செய்து விட்டு ஓடி விட்டார் என்று கூறினார் .போலீசார் சுகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .