“கேமெரா லைட் எரியுது ,என்னோடது எல்லாம் தெரியுது” -புருஷன் செஞ்ச வேலையால் பதறும் மனைவி

 

“கேமெரா லைட் எரியுது ,என்னோடது எல்லாம் தெரியுது” -புருஷன் செஞ்ச வேலையால் பதறும் மனைவி

ஒரு கணவன் தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டு அவரை உளவு பார்க்க வீட்டிற்குள் சிசிடிவி கேமெரா வைத்ததால் அந்த மனைவி போலீசில் புகாரளித்தார்.


குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நவரங்க்புராவில் வசிக்கும் ரோகிணி என்ற 41 வயது பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறார் .இவர் 2005ம் ஆண்டு ரோனக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயானார் . அப்போதிலிருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பிரிவதும் மீண்டும் சேருவதுமாக இருந்துள்ளர்கள்
இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் ஒரு புது வீடு கட்டியுள்ளார் .அந்த வீட்டை தன்னுடைய மனைவியின் வருமானத்தில்தான் முழுக்க முழுக்க கட்டியுள்ளார் .அப்போது அந்த வீட்டில் தன்னுடைய மனைவியை உளவு பார்க்கவும், அவரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டும் அந்த வீட்டிற்குள் கேமெராவை பதித்து கட்டியுள்ளாராம் .இதனால் அவரின் மனைவி அவரின் மீது சந்தேகப்பட்டு இது பற்றி கேட்டபோது அவரை கடுமையாக தாக்கியுள்ளார் .அதனால் அந்த வீட்டிலிருக்கவே அவர் பயந்து கொண்டு தன்னுடைய உறவினர் வீட்டிலிருந்த படியே வேலைக்கு சென்று வந்துள்ளார் .அவ்வப்போது குழந்தைகளை வந்து பார்த்து விட்டு போவார் .
பின்னர் இந்த கேமெரா விவகாரத்தால் கடும் கொந்தளிப்புக்குள்ளான அந்த மனைவி அவரின் கணவர் மீது போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் .

“கேமெரா லைட் எரியுது ,என்னோடது எல்லாம் தெரியுது” -புருஷன் செஞ்ச வேலையால் பதறும் மனைவி