“அவர் உறவை விரும்பல, பணத்தைத்தான் விரும்பறார்” -கனடா கணவர் மீது காண்டான மனைவி செஞ்ச வேலை

 

“அவர் உறவை விரும்பல, பணத்தைத்தான் விரும்பறார்” -கனடா கணவர் மீது காண்டான மனைவி செஞ்ச வேலை

வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு போன ஒரு பெண் அங்கு கணவரின் கொடுமை தாங்க முடியாமல் அவர் மீது போலீசில் புகார் கூறியுள்ளார் .

“அவர் உறவை விரும்பல, பணத்தைத்தான் விரும்பறார்” -கனடா கணவர் மீது காண்டான மனைவி செஞ்ச வேலை

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 25 வயதான பி.எச்.டி பட்டம் பெற்ற  ஸ்ரேயாவுக்கு 2017ம் ஆண்டு அவரின் பெற்றோர் திருமணம்  செய்து வைத்தார்கள் .அப்போது கனடா நாட்டில் உள்ள அவரை விட 10 வயதான மூத்தவரை திருமணம் செய்து வைத்தார்கள் .அவர்களின் திருமணம் நடந்த நாள் முதல் கொண்டு அந்த கணவருக்கு அந்த பெண்ணின் பணத்தின் மீது தான் நாட்டம் இருந்தது  .அதனால் எந்நேரமும் அந்த பெண்ணிடம் பணத்தை பற்றியும், நகைகள் பற்றியும் பேசி வந்துள்ளார் .மேலும் அந்த பெண்ணின் மாமியாரும் அவரிடம் வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளார் .

அந்த பெண்ணின் திருமணத்தின் போது அவரின் பெற்றோர் 45 லட்ச ரூபாய்க்கு சீர் வரிசை செய்துள்ளார்கள் .அதற்கு மேலும் சீர்வரிசை வேண்டுமென்று அவரை அவரின் கணவர்  கொடுமை படுத்தியுள்ளார் .பிறகு அந்த பெண்ணை கனடா நாட்டிற்கு அழைத்து சென்று, அங்கும் அவரை வேலைக்கு சென்று சம்பாதிக்க சொல்லியுள்ளார் .அதன் பிறகு தினமும் குடித்து விட்டு வந்து  அந்த பெண்ணின் கணவர் அவரை பாலியல் கொடுமை செய்துள்ளார் .அதனால் அந்த பெண் அவரின் கொடுமைகள்  பொறுக்க முடியாமல் கனடா போலீசில் அந்த கணவர் மீது புகார் கூறினார் .ஆனால் அவர் அங்கு தலைமறைவாகிவிட்டார் .பிறகு அந்த பெண் கணடாவிலிருந்து தப்பி வந்துள்ளார் .பின்னர் ராஜ்கோட்டில் உள்ள காவல் நிலையத்தில் அந்த கணவர் மீது புகார் கூறியுள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்  .

“அவர் உறவை விரும்பல, பணத்தைத்தான் விரும்பறார்” -கனடா கணவர் மீது காண்டான மனைவி செஞ்ச வேலை