“பையன் பகலிலேயே ..அப்பா அர்த்த ராத்திரியில்..” -எம். எல். ஏ. குடும்பத்தால் குதறப்பட்ட பெண்.

 

“பையன் பகலிலேயே ..அப்பா அர்த்த ராத்திரியில்..” -எம். எல். ஏ. குடும்பத்தால் குதறப்பட்ட பெண்.

ஒரு 30 வயது பெண்ணை ஒரு எம் .எல். ஏ. மற்றும் அவரின் குடும்பத்தினர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார் .
உத்திரபிரதேச மாநிலம் படோஹியில் ஒரு நில மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ விஜய் மிஸ்ரா, அவரது மகன் விஷ்ணு மிஸ்ரா மற்றும் படோஹியில் உள்ள அவரின் மற்றொரு உறவினர் மீது ஒரு பெண் பலாத்கார புகார் கொடுத்துள்ளார் .


வாரணாசியை சேர்ந்த அந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண், 2014ம் ஆண்டில் எம் எல் ஏ விஜய்மிஷ்ரா படோகியில் பிரச்சாரத்திற்கு வந்த போது தன்னை துப்பாக்கி முனையில் கெடுத்ததாக கூறியுள்ளார் .அதன் பிறகு அவரின் மகனும், மற்றும் அவரின் இன்னொரு உறவினரும் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார் மேலும் எம். எல். ஏ. இந்த விஷயத்தை வெளியே சொன்னால் ,தன்னை அப்போது கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அவருக்கு பயந்து தான் மும்பை சென்றுவிட்டதாக அவர் கூறினார் .இப்போது அவர் வேறு ஒரு வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளதால் அவர் மீது துணிந்து புகார் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார் .அவரின் புகாரை ஏற்று போலீசார் எம் எல் ஏ குடும்பத்தினர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளார்கள் . மேலும் புகாரளித்த அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள் .

“பையன் பகலிலேயே ..அப்பா அர்த்த ராத்திரியில்..” -எம். எல். ஏ. குடும்பத்தால் குதறப்பட்ட பெண்.