“ஆம்புலன்ஸ் டிரைவரின் அட்டகாசம் ” வரதட்சணை குறைவா கொண்டு வந்த மனைவி- நண்பர்களுக்கு விருந்தாக்கி ,ரயிலில் தள்ளிய கணவர் ..

 

“ஆம்புலன்ஸ் டிரைவரின் அட்டகாசம் ” வரதட்சணை குறைவா கொண்டு வந்த மனைவி- நண்பர்களுக்கு விருந்தாக்கி ,ரயிலில் தள்ளிய  கணவர் ..

திருமணத்தில் நகை குறைவாக போட்டதால் தன்னுடைய மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி, ஒரு ஆம்புலன்ஸ் ட்ரைவர் அநியாயம் செய்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட்டில் வசிக்கும் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் 2016ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .கல்யாணத்தின்போது அவரின் அப்பா குறைவாக நகை செய்து போட்டுள்ளார் .இதனால் அந்த மாப்பிள்ளை அன்று முதல தன்னுடைய மனைவியை கொடுமை படுத்தியுள்ளார் .ஒரு முறை அந்த பெண் கர்ப்பமான போது அவரின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்துள்ளார் .“ஆம்புலன்ஸ் டிரைவரின் அட்டகாசம் ” வரதட்சணை குறைவா கொண்டு வந்த மனைவி- நண்பர்களுக்கு விருந்தாக்கி ,ரயிலில் தள்ளிய  கணவர் ..
இதனால் அந்த பெண் குடும்ப நீதிமன்றத்தில் அவர் மீது புகாரளித்துள்ளார் .பிறகு அங்கு இருவரையும் கூப்பிட்டு சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்கள் .
அதற்கு பிறகு அந்த கணவரின் கொடுமை இன்னும் அதிகமாகியுள்ளதாம் .மேலும் கடந்த ஜூலை 24ம் தேதியன்று அந்த 28 வயது பெண்ணை ‘வா வெளியே போலாம்’னு ஒரு தனிமையான இடத்திற்கு அந்த கணவர் கூட்டி சென்றுள்ளார் .அப்போது அங்கு அவர் தன்னுடைய மனைவியை, தன்னோடு வேலை செய்யும் சில நண்பர்களுக்கு இரண்டு நாட்கள் ஒரு இடத்தில் அடைத்து வைத்து ,விருந்தாக்கியுள்ளார் . .பிறகு அந்த பெண்ணை அங்கிருந்து கடத்திக்கொண்டு போய் அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் அவரின் கணவர் தள்ளியுள்ளார் .

“ஆம்புலன்ஸ் டிரைவரின் அட்டகாசம் ” வரதட்சணை குறைவா கொண்டு வந்த மனைவி- நண்பர்களுக்கு விருந்தாக்கி ,ரயிலில் தள்ளிய  கணவர் ..
மகளை காணாத அவரின் தாய் அந்த பெண்ணின் கணவர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
இதனால் போலீசார் அந்த கணவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.