பயணிகள் இன்றி வெறிச்சோடிய மணப்பாறை பேருந்து நிலையம்!

 

பயணிகள் இன்றி வெறிச்சோடிய மணப்பாறை பேருந்து நிலையம்!

திருச்சி :

மணப்பாறையில் பேருந்துகள் இயக்கப்பட்டும் பயணிகள் இன்றி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றது
 
ஊரங்கு தளர்வில் இன்று முதல் மாவட்டத்திற்குள்ளான அரசு பேருந்துகள் காலை முதல் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையிலும் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. வழக்கம் போல் காலை முதலே பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இன்றி பேருந்து நிலையமே வெறிச்சோடி காணப்படுகின்றது. குறைந்த பயணிகள் நடமாட்டம் கூட இல்லாத நிலையில் பேருந்துகள் வரிசையில் அணிவகுத்து காத்திருக்கும் நிலையும், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மட்டுமே அங்கும் இங்குமாக அலையும் பரிதாப நிலையும் உள்ளது.
இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இனிதான் பயணிகளின் வருகை இருக்கும் என்றாலும் மாவட்டத்திற்குள்ளேயே இயக்கப்படும் பேருந்துகளால் அதிக அளவிலான பயணிகள் வர மாட்டார்கள் என்றே கூறப்படுகின்றது.